தர்மபுரி: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஓராண்டாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் சுற்றுலா தலம் வெறிச்சோடியது. அங்குள்ள சிறு வியாபாரிகள், பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் தொழிலாளர்கள், மீனவர்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், அரசின் வழிகாட்டுதலின்படி ஓராண்டுக்கு பிறகு இன்று (27ம் தேதி) முதல், ஒகேனக்கல் சுற்றுலா தலத்தை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.