சென்னை: சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த மீனவர் முருகன். இவரது பைபர் படகில் காசிமேட்டை சேர்ந்த 6 மீனவர்கள் நேற்றுமுன்தினம் காலையில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். மதியம் பழவேற்காடு அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது சமைப்பதற்காக காஸ் அடுப்பை பற்ற வைத்தபோது கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. தீ மளமளவென பரவியதால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள், கடலில் குதித்து தத்தளித்தனர். இதில் மீனவர் குப்பனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.