மதுராந்தகம்: சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கற்கள் ஏற்றிவந்த லாரி கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் படாளம் அருகே சென்றுக்கொண்டிருந்த ஒரு கன்டெய்னர் லாரி உத்திரமேரூர் நெடுஞ்சாலையில் திரும்ப முயன்றது. அப்போது பின்னால் வந்த கற்கள் ஏற்றிய லாரி திடீரென அந்த லாரி மீது சாலையில் கவிழ்ந்தது. சாலை முழுவதும் கற்கள் சிதறியதால் அவ்வழியாக வாகனங்கள் செல்லமுடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன்காரணமாக செங்கல்பட்டு-திண்டிவனம் செல்லும் சாலை வழியாக அனைத்து வாகனங்களும் திருப்பி விடப்பட்டன.