பழநி அருகே அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் பலி

பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இருந்து கோவைக்கு நேற்று அதிகாலை 2.30 மணிக்கு 30 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பழநியில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தாழையூத்து அருகே பஸ் சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, பஸ் மீது மோதி சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் பஸ்சின் நடுப்பகுதி நொறுங்கியது. பஸ்சில் இருந்த பொள்ளாச்சியைச் சேர்ந்த மணிகண்டபிரபு (30), விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியை சேர்ந்த உக்கிரபாண்டி (24) உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த லாரி டிரைவர் ராஜேஷ்(30) மற்றும் பஸ் பயணிகள் 14க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேரக்கப்பட்டனர். 

Related Stories: