சென்னை: தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பதுறை வெளிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: தகவல்களின் அடிப்படையில் அரசு நிர்வாகம் செய்தல் மற்றும் அரசின் நல திட்டங்கள் அனைத்தும் பொது மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து அரசு துறைகளும் தங்களுடைய பல்வேறு கோப்புகளையும் தமிழ்நாடு இ-சேவை மையத்திற்கு கணினி வழித் தகவல்களாக அனுப்ப வேண்டும். அவ்வாறு பெறப்படும் தகவல்களை ஆய்வு செய்தல், துறைகளுக்கிடையே பரிமாற்றம் உள்ளிட்ட தகவல் பாதுகாப்பு பணிகளை தமிழக அரசு மேற்கொள்ளும். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும்.