வேலூர்: வேலூர் சலவன்பேட்டை கச்சேரி தெருவை சேர்ந்தவர் தினேஷ்(30). டைல்ஸ் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜீவிதா (23). அக்ஷயா (ஐந்தரை வயது), நந்தகுமார்(4), ஆறு மாத ஆண் குழந்தை என 3 பிள்ளைகள் இருந்தனர். குடிபோதைக்கு அடிமையான தினேஷ், கடந்த வாரம் போதையில் ஜீவிதாவுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ஜீவிதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். பெற்றோரின் அறிவுரை ஏற்று நேற்று காலை தினேஷ் வீட்டிற்கு வந்துள்ளார்.