எல்லையில் ஊடுருவ முயற்சி 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக ஜம்மு காஷ்மீர் எல்லையில் சமீப காலமாக, பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வது அதிகமாகி இருக்கிறது. நிலப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் கண்காணிப்பு தீவிரமாக இருப்பதால், ஆறுகள் வழியாக நீந்தி ஊடுருவல் செய்வதற்காக கடுமையான நீச்சல் பயிற்சி 40 தீவிரவாதிகள், பாகிஸ்தான் எல்லையில் தயார்நிலையில் இருப்பதாக இந்திய உளவுத்துறைகள் எச்சரித்துள்ளன. இதனால், எல்லை முழுவதும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள உரி எல்லையில், நேற்று தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சி கண்டறியப்பட்டது. அவர்கள் மீது பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சோபியான் மாவட்டத்தில் துப்பாக்கியுடன் பொதுமக்களை அச்சுறுத்தி கொண்டிருந்த தீவிரவாதியையும் பாதுகாப்பு படை சுட்டு கொன்றது.

Related Stories: