மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே உயரழுத்த மின்கம்பி அறுந்துவிழுந்ததில் 35க்கு மேற்பட்ட பன்றிகள் உயிரிழந்தது. மதுராந்தகம் நகரம் சூரக்குட்டை, அப்துல்கலாம் நகர் பகுதிகளில் பன்றி வளர்ப்பு தொழில் நடைபெற்று வருகிறது. இங்கிருந்து வெளியூர்களுக்கும் பன்றிகள் அனுப்பிவைக்கின்றனர். இந்த நிலையில், நேற்று அதிகாலையில் மதுராந்தகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் மழை பெய்துள்ளது. அப்துல்கலாம் நகர் பகுதியில் செல்லும் உயரழுத்த மின்கம்பத்தில் வயர் அறுந்து கழிவுநீர் கால்வாயில் விழுந்து மின்கசிவு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் கால்வாயில் ஏராளமான பன்றிகள் இறங்கியுள்ளது. இதில் ஷாக் அடித்து 35க்கும் மேற்பட்ட பன்றிகள் பரிதாபமாக உயிரிழந்தன.