உங்கள் பிரதமரே ஊடகத்தை எதிர்கொள்ள மறுப்பவர் தானே : அண்ணாமலை மீது திருமுருகன் காந்தி கடும் தாக்கு

சென்னை : ‘அரசியல்-ஆடுகளை’ மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் அச்சுறுத்தவே செய்யும் என்று மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார்.  தொலைக்காட்சி விவாதங்களில் அனைத்து கட்சியினரும் பங்கேற்று வரும் நிலையில் மே- 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் கடந்த நான்கு வருடமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க முடியவில்லை. இதற்கு பாஜக தான் காரணம் என்று திருமுருகன் காந்தி காட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இயக்கத்தினர் மீது வழக்குகள் போட்டு மிரட்டி வருவதாகவும் பொதுக்கூட்டங்களுக்கு தடை போட்டு வருவதாகவும் பாஜக மீது திருமுருகன் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இயக்கங்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாது, ஏன்னா, நாங்க இந்தியாவுல பெரிய கட்சி, அதிகாரத்துல இருக்குற கட்சி’ என அண்ணாமலை சொல்கிறார்.

அவ்வளவு பலம்பொருந்திய கட்சி ஏன், மே17 இயக்கத்தை டி.வி விவாதங்களுக்கு அழைக்கக்கூடாதென கட்டளை இடவேண்டும்? அவர்கள் வந்தால் வரமாட்டோம் என..அடம்பிடிக்க வேண்டும்? 4 வருடமாக விவாதங்களில் தடைசெய்தாலும், வழக்கு போட்டு மிரட்டினாலும், பொதுகூட்டங்களை தடைசெய்தாலும் எமது கேள்வி மக்களை சென்றடைகின்றன. உங்கள் பிரதமரே ஊடகத்தை எதிர்கொள்ள மறுப்பவர் தானே.

‘அரசியல்-ஆடுகளை’ மேய்ப்பவர்களுக்கு அறிவுசார் அரசியல் அச்சுறுத்தவே செய்யும் என்று பதிவிட்டிருக்கிறார்.

Related Stories: