டெல்லி: உரிமைகள் மற்றும் சுயமரியாதைக்காக போராடி வரும் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் காங்கிரஸ் துணை நிற்கும் என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு கடந்து ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி 3 வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பின்னர் குடியரசு தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி டெல்லி, ஹரியானா, பஞ்சாப் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 10 மாதங்களை எட்டவுள்ள நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு ஒன்றிய அரசு தற்போது வரை செவிசாய்க்கவில்லை.