சென்னை: ஊர்காவல் படையினர் ெதாடர்பாக தமிழக அரசு, 2019ம் பிப்ரவரி 19ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, பாஜ மாநில தலைவர் அண்ணாமலை பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜராகிவாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 10 நாட்கள் என்பது குறைந்தபட்ச பணிநாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் நாட்கள் பணி வழங்கப்படும். உச்ச நீதிமன்றம் உத்தரவின்படி ஊர்காவல் படையினரை பணிவரன் முறைப்படுத்த முடியாது. தாமாக முன்வந்து சேவை செய்பவர்களுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் ஊதியம் வழங்கப்படுகிறது என்று விளக்கமளித்தார்.