ஹைதராபாத் : தெலுங்கானாவில் சாப்பிட மறுத்த 4 வயது குழந்தையை தந்தை கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. தெலுங்கானா மாநிலம் மேடக் நகராட்சியைச் சேர்ந்தவர் நாகராஜ், டிராக்டர் ஓட்டுநரான இவர், முதல் மனைவி உயிரிழந்ததை அடுத்து 4 வயது மகளுடன் 2வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாப்பிட மறுத்த தனது 4 வயது மகளை நாகராஜ் மது போதையில் கொடூரமாக அடித்து துன்புறுத்துகிறார்.