புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.45 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.34 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 30,256 பேர் பாதித்துள்ளனர்.
* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,34,78,419 ஆக உயர்ந்தது.* புதிதாக 295 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,45,133 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 43,938 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,27,15,105 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,18,181 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* இந்தியாவில் இதுவரை 80,85,68,144 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.* நேற்று ஒரு நாள் மட்டும் 3,77,296 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.* இந்தியாவில்குணமடைந்தோர் விகிதம் 97.72% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.95% ஆக குறைந்துள்ளது.