ஆவடி: ஆட்டோவை நிறுத்தி ஜூஸ் குடித்தபோது 61 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு மர்ம நபர் தப்பிவிட்டார். ஆவடி அருகே கோவில்பதாகை கலைஞர் நகரை சேர்ந்தவர் லீலாவதி (53). இவர் நேற்று காலை ஆவடியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.61 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார். பின்னர் அந்த பணத்ைதயும் தான் ஏற்கனவே கையில் வைத்திருந்த பணத்தையும் சேர்த்து ரூ.61 ஆயிரத்தை கைப்பையில் வைத்துகொண்டு ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுள்ளார்.ஆவடி, ஓ.சி.எப் சாலையில் ஆட்டோவை நிறுத்தி கடையில் ஜூஸ் வாங்கி குடித்துவிட்டு பிறகு ஆட்டோவில் வீட்டுக்கு சென்றார்.