புதுெடல்லி: ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வை டிசம்பர் 16 முதல் ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. இது குறித்து சிபிஎஸ்இ வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு: ஒன்றிய ஆசிரியர் தகுதி தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 13ம் தேதிக்குள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 20 மொழிகளில் நடக்கும் இந்த தேர்வு, கணினி வழியாக நடத்தப்படும். தேர்வு குறித்த விவரங்கள், பாடத்திட்டங்கள், மொழிகள், தகுதி வரம்பு, தேர்வு கட்டணம், தேர்வு மையம், முக்கிய தேதிகள் ஆகிய விவரங்கள், ஒன்றிய தகுதி தேர்வு இணையதளமான //ctet.nic.in-ல் நாளை முதல் பதிவேற்றப்படும்.