சென்னை: 70 கோடியில் மதுரையில் பிரமாண்டமாக கட்டப்படவுள்ள கலைஞர் நூலகத்தின் கட்டிட வடிவமைப்பை இறுதி செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முதன்மை தலைமை பொறியாளர் விஸ்வநாதன், தலைமை செயலாளர் இறையன்பு, பொதுப்பணித்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, சிறப்பு செயலாளர் ரவீந்திரபாபு, மதுரை மண்டல தலைமை பொறியாளர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மதுரையில் கலைஞர் நூலகம் மக்களை கவரும் நிலையில் வடிவமைக்கப்பட வேண்டும்.