தமிழகத்தில் புதிதாக 1,669 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,56,804 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,669 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26,42,030 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமை என 16,843 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 1,565 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 25,89,899 ஆக உள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 17 பேர் நேற்று உயிரிழந்தனர். மேலும், சென்னையில் நேற்று புதிதாக 196 பேர், கோவை 205, செங்கல்பட்டு 115 பேர், ஈரோடு 132, தஞ்சாவூர் 110 ஆகிய மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் குறைவாகவே உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: