சென்னை: மருத்துவ சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள இறப்பின் காரணம் திருப்தி அளிக்காவிட்டால் கலெக்டரிடம் விண்ணப்பித்து அதிகாரப்பூர்வ ஆவணப்படிவம் பெற்றுக்கொள்ளலாம் என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு இறப்பின் காரணம் கொரோனா என குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ ஆவணம் வழங்குவதற்கான எளிமையான வழிக்காட்டுதல்களை வழங்கிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.