சென்னை: கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் உள்ள 60அடி சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகளின் முன்பு அமைக்கப்பட்ட மேற்கூரை, தள்ளுவண்டி மற்றும் நடைபாதை கடைகளால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கொடுங்கையூர் போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி பலமுறை தெரிவித்தும், சம்மந்தப்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதுபற்றி, கொடுங்கையூர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வரதன், எம்கேபி நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணனுக்கு கடிதம் அளித்தார்.