புதுடெல்லி: காலிஸ்தான் இயக்கத்தினர் இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றனர். இவர்களுக்கு பாகிஸ்தான் ஆதரவு தெரிவித்து வருகிறது. இவர்கள் சீக்கிய இளைஞர்களை மூளைச்சலவை செய்து தங்கள் இயக்கத்தில் இணைத்து கொண்டு பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட வைக்கின்றனர். காலிஸ்தான் இயக்க ஆதரவாளர்கள் தான் டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பாகிஸ்தானில் வெளிவரும் ஒரு இதழில் ‘அமெரிக்காவில் காலிஸ்தானியரின் செயல்பாடுகள்’ என்ற கட்டுரை வெளியானது.