சென்னை: நீலகிரி மாவட்டத்தில் 110 சட்டவிரோத கட்டுமானங்களை வரன்முறைப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் கோரிக்கை மனு மீது பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் பி.முத்துக்குமார் தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளால்தான் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. சட்டவிரோத ரிசார்ட்கள் நீலகிரியில் அதிக அளவில் உள்ளன.