டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை தாக்குவது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 1 முதல் 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்படுவது 2.72 முதல் 3.59% ஆக இருந்தது. ஆனால் 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்தில் இருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது நூறு பேரில் 7 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக உள்ளனர்.