மேலூர் : அலங்காநல்லூர் அருகே, பெரியாற்றுக் கால்வாயில் அடித்துச் சென்ற கல்லூரி மாணவர் உடலை மேலூர் அருகே தீயணைப்புத்துறையினர் மீட்டனர். அலங்காநல்லூர் அருகே உள்ள கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் கணேசன். இவரது மகன் ஹரிபிரகாஷ் (18). இவர், மதுரை திருநகர் தனியார் கல்லூரியில் ‘பிசியோதெரபி’ முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று நண்பர்களுடன் அலங்காநல்லூர் பகுதியில் உள்ள பெரியாறு பாசன கால்வாயில் குளித்துள்ளார்.