சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் சோளம் தீவிர சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சீர்காழி அருகே செம்பதனிருப்பு காத்திருப்பு அள்ளி விளாகம் ராதாநல்லூர் இளைய மதுகூடம் நடராஜபிள்ளை சாவடி, திருவாலி நாங்கூர், புதுத்துறை, மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சோளம் பயிரிட்டு நன்கு வளர்ந்து சோளம் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு ஏக்கரில் சோளம் பயிரிட ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவாகும் என்றும், ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும் எனவும், இந்த ஆண்டு சோளம் நல்ல மகசூலை தந்திருப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.