ஆம்பூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கல்லூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன்(45), டிரைவர். இவரது மனைவி மீனாட்சி (40). இவர்களின் மகன் ஜஸ்வந்த்(9), 4ம் வகுப்பும், மகள் ஹரிபிரிதா(7), 2ம் வகுப்பும் படித்து வந்தனர். மீனாட்சி, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கடாம்பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்கிறார். நேற்று முன்தினம் லோகேஷ்வரன், குடும்பத்தினரை அருகிலுள்ள கைலாசகிரி மலைக்கோயிலுக்கு அழைத்து சென்றார்.