அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் 12,959 கோயில்களில் பணிபுரிவோருக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை தரப்படும். அமைச்சர் சேகர் பாபு செயல் பாபுவாக பணியாற்றுகிறார் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். சட்டப்பேரவையில் அறிவித்த திட்டங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

Related Stories: