செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 60 ஏக்கர் நெற்பயிர், மழைநீரில் மூழ்கி முழுவதுமாக நாசமானது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். செங்கல்பட்டு அடுத்த கொண்டமங்கலம் கிராமத்தில் 150 ஏக்கரில் நெல் பயிர், விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக, இப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதன் காரணமாக 150 ஏக்கரில் நடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களில், சுமார் 60 ஏக்கர் பயிர்கள், மழைநீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் 10 முதல் 20 நாட்களில் அறுவடைக்கு தயாராக உள்ள இந்த பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கடும் மன உளைச்சர் அடைந்துள்ளனர்.