ஷிவமோகா: கர்நாடகாவின் ஹசன் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சமீபத்தில் 150 குரங்குகள் கொல்லப்பட்ட விவகாரம், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு மூலமாக வெளிச்சத்துக்கு வந்தது. இந்நிலையில், ஷிவமோகா மாவட்டம், பத்ராவதி தாலுகாவில் உள்ள ரங்கநாதபுரா கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பாக ஷிவமோகா விலங்குகள் மீட்பு குழுவினர் அங்கு சென்று போலீஸ் உதவியுடன் ஆய்வு செய்தனர்.