நடிகை கங்கனா மீதான வழக்கை ரத்து செய்ய கோர்ட் மறுப்பு

மும்பை: பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவை தொடர்ந்து நடிகை கங்கனா ரனவத், பாலிவுட் மீது பல்வேறு பரபரப்பு புகார்களை கூறியிருந்தார். வாரிசு நடிகர், நடிகைகளுக்கு மட்டுமே பாலிவுட்டில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது, போதை பொருள் பயன்பாடு உள்பட பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் கூறியிருந்தார். மேலும், தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்பட சில முன்னணி இயக்குனர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்திருந்தார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பாலிவுட் பாடலாசிரியர் ஜாவித் அக்தர் குறித்து கங்கனா ரனவத் அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கங்கனா ரனவத் மீது அந்தேரி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஜாவித் அக்தர் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில், உடனே வழக்கை ரத்து செய்யக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில் கங்கனா ரனவத் மனு தாக்கல் செய்திருந்தார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கங்கனா ரனவத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Related Stories: