விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயில்களில் பின்பற்ற வேண்டிய வழிபாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: பக்தர்கள் தங்களது இல்லங்களில் வைத்து வழிபாடு செய்யப்பட்ட சிலைகளை கோயில்களில் வைப்பதற்கு ஏதுவாக கோயில்களுக்கு பொறுப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டும். அச் சிலைகளை கோயில் வளாகத்தில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். இந்த சிலைகளை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சுற்றுச்சூழல் பாதிக்காத வண்ணம் நீர்நிலைகளில் கரைக்க ஏதுவாக தொடர்புடைய மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலை பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: