உத்திரமேரூர்: உத்திரமேரூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (36). மெக்கானிக். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் (25), சித்தாள் வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி 2 பேரும், பெருங்கோழி கிராமத்துக்கு பைக்கில் சென்றனர். அங்கு, ஏலம் விடப்பட்ட ஏரி மீன் வாங்கி கொண்டு, வீட்டுக்கு புறப்பட்டனர். நல்லூர் கூட் ரோடு அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அந்த நேரத்தில், எதிரே வந்த கார் மீது, பைக் வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர்.