வாகன விபத்தில் 2 வாலிபர்கள் பலி

உத்திரமேரூர்: உத்திரமேரூரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (36). மெக்கானிக். இவரது நண்பர், அதே பகுதியை சேர்ந்த அப்பாஸ் (25), சித்தாள் வேலை செய்து வந்தார். கடந்த 6ம் தேதி 2 பேரும், பெருங்கோழி கிராமத்துக்கு பைக்கில் சென்றனர். அங்கு, ஏலம் விடப்பட்ட ஏரி மீன் வாங்கி கொண்டு, வீட்டுக்கு புறப்பட்டனர். நல்லூர் கூட் ரோடு அருகே சென்றபோது, முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றனர். அந்த நேரத்தில், எதிரே வந்த கார் மீது, பைக் வேகமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்தனர்.

இதை பார்த்த பொதுமக்கள், அவர்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திய டிரைவர், காரை நிறுத்திவிட்டு தப்பிவிட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு, கமலக்கண்ணன், அப்பாஸ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். புகாரின்படி உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: