புதுடெல்லி, :நாளை நடைபெறவிருக்கும் விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் 261 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ஒன்றிய ரயில்வே அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டப்பட உள்ளது. இதில் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக கொண்டாட்டம் ஏதும் இன்றி மக்கள் வீடுகளை விட்டு கூட வெளியே வராமல் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு சில கட்டுப்படுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 261 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி ஒன்றிய ரயில்வேயில் 201 சிறப்பு ரயில்களும் , மேற்கு ரயில்வேயில் 42 சிறப்பு ரயில்களும், கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது.