ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, தான் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி, இன்று அவர் வீட்டுக் காவலில் இருப்பதாகவும், ஒன்றிய அரசு பொய்யான செய்திகளை வெளியிட்டு வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒன்றிய அரசு ஆப்கான் மக்களின் உரிமைகள் மீது அக்கறை கொண்டு பேசுகிறது. ஆனால் காஷ்மீரிகளுக்கு அதே உரிமையை வேண்டுமென்றே மறுக்கிறது.