திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். திருமழிசை பேரூராட்சி சார்பில் மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடக்க விழா நடைபெற்றது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கி.ரவி தலைமை வகித்தார். பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி வரவேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் பி.பிரதீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.