மருத்துவ சிகிச்சை பெறும் விஜயகாந்தை பார்க்க பிரேமலதா துபாய் பயணம்

சென்னை : துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை பார்க்க, அவரது மனைவி பிரேமலதா நேற்று அதிகாலை விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த 30ம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் புறப்பட்டு சென்றார்.

 அவருடன் இளைய மகன் சண்முகபாண்டியன் மற்றும் 2 உதவியாளர்களும் சென்றனர்.  அந்த நேரத்தில், விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும் செல்வதாக இருந்தது. ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் பிரச்னை இருந்ததால், அவரால் விஜயகாந்துடன் செல்ல முடியவில்லை. இதையடுத்து பிரேமலதா சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிமன்றம் விசாரித்து, ‘வெளிநாடு செல்ல பிரேமலதாவை அனுமதிக்கலாம்’ என்று உத்தரவிட்டது. இதையடுத்து பிரேமலதா நேற்று அதிகாலை 4 மணிக்கு எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்.

Related Stories: