டெல்லி: பாரா ஒலிம்பிக்ஸில் தங்க பதக்கம் வென்று தாயகம் திரும்பிய சுமித் அண்டில், தேவேந்திர ஜஜாரியா உள்ளிட்டோருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரா ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீரர், வீராங்கனைகள் இதுவரை இல்லாத அளவாக டோக்கியோவில் அதிக பதக்கங்களை வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர். இன்னும் இரண்டு நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த நிலையில் போட்டிகள் நிறைவடைந்த இந்திய வீரர், வீராங்கனைகள் தாயகம் திரும்பி வருகின்றனர். டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக்ஸில் விளையாட்டில் F 64 பிரிவு ஈட்டி எரிதலில் சுமித் ஆண்டில் தங்கம் வென்றார்.