டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் அவனி லெகாரா 2-வது பதக்கம் வென்றார். 50மீ. ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து அவனி லெகாரா வெண்கலம் வென்றார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 24ம் தேதி முதல் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் அபாரமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த 30ம் தேதி நடைபெற்ற பாராலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதலில் முந்தைய உலக சாதனையை சமன் செய்த அவனி லெகரா (19 வயது), நடப்பு தொடரில் இந்தியாவுக்காக முதல் தங்கத்தை வென்றதுடன் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் வசப்படுத்தினார்.