சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வு அக்டோபர் மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களில் புதியவர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு கடந்த 2019 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இணைய தளம் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2020 ஜனவரி 22ம் தேதி முதல் தகுதியுள்ள விரிவுரையாளர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றினர்.