சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா (திமுக) பேசுகையில், தாம்பரம் தொகுதி, சிட்லபாக்கம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு ஆவன செய்யுமா?: அமைச்சர் கே.என்.நேரு: செங்கல்பட்டு மாவட்டம் சிட்லபாக்கம், மாடம்பாக்கம் ஆகிய பேரூராட்சிகளை செம்பாக்கம் நகராட்சியுடன் ஒருங்கிணைத்து பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பேரூராட்சிகளுடன் செம்பாக்கம், அனகாபுத்தூர் நகராட்சிகளையும், தாம்பரம் நகராட்சியுடன் இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தி கடந்த 24ம் தேதி சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிடப்பட்டது.