சென்னை: தமிழகம் முழுவதும் 12 கூடுதல் எஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: கோவை காவலர் பயிற்சி பள்ளி முதல்வராக இருந்து கண்ணன், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஜோஷ் தங்கையா சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமி கூடுதல் கண்காணிப்பாளராகவும், சென்னை தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் இருந்த சங்கர், சென்னை சிறப்பு பிரிவு எஸ்பிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளராகவும், கோவை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளராக இருந்த சங்கு திருநெல்வேலி மாவட்டம் சைபர் க்ரைம் பிரிவுக்கும் விழுப்புரம் மாவட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவில் இருந்த தேவநாதன் கோவை மாவட்ட சைபர் க்ரைம் பிரிவுக்கும், ஈரோடு அதிவிரைவுப்படையில் இருந்த விவேகானந்தன் கிருஷ்ணகிரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பியாகவும்.