நாளை முதல் மாவட்டம்தோறும் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை சுற்றுப்பயணம்: பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவிப்பு

சென்னை: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டம் தோறும் நாளை முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று மாநில பொதுச்ெசயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை:  தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மாவட்டம்தோறும் நாளை முதல் முதற்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார். தென்காசி மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு பாவூர் சத்திரத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திலும், பிற்பகல் 12 மணிக்கு தென்காசியில் சமுதாய தலைவர்கள் கூட்டத்திலும், பிற்பகல் நெற்கட்டு சேவலில் மாவீரன் புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சியிலும் மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில் நகரில் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து 5ம் தேதி காலை 10 மணியளவில் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.

6ம் தேதி தர்மபுரி, 11ம் தேதி பரமக்குடியில் தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா, 14ம் தேதி கள்ளக்குறிச்சி, 15ம் தேதி மயிலாடுதுறை, 16ம் தேதி விழுப்புரம், 17,18ம் தேதி பிரதமர் மோடி பிறந்தநாள் விழா நிகழ்ச்சிகள், 19ம் தேதி வடசென்னை கிழக்கு, 20ம் தேதி திருவாரூர் மாவட்டம், 22ம் தேதி மதுரை புறநகர், 24ம் தேதி சென்னை மேற்கு, 26ம் தேதி கன்னியாகுமரி, 27ம் தேதி சிவகங்கை, 28ம் தேதி திண்டுக்கல் மேற்கு மாவட்டம், 29ம் தேதி கோவை தெற்கு என மாவட்டந்தோறும், மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம், சமுதாய தலைவர்கள் சந்திப்பு கூட்டம், மாணவர்களுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: