சென்னை: தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மாவட்டம் தோறும் நாளை முதற்கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்று மாநில பொதுச்ெசயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, மாவட்டம்தோறும் நாளை முதல் முதற்கட்ட சுற்றுப்பயணம் செய்கிறார். தென்காசி மாவட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு பாவூர் சத்திரத்தில் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திலும், பிற்பகல் 12 மணிக்கு தென்காசியில் சமுதாய தலைவர்கள் கூட்டத்திலும், பிற்பகல் நெற்கட்டு சேவலில் மாவீரன் புலித்தேவன் நினைவிடத்தில் அஞ்சலி நிகழ்ச்சியிலும் மாலை 4 மணிக்கு சங்கரன் கோவில் நகரில் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதை தொடர்ந்து 5ம் தேதி காலை 10 மணியளவில் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.