சென்னை: ஒருங்கிணைந்த நீர்மோண்மையை உறுதி செய்வதற்காக ₹17.174 கோடியில் மாதிரி கிராமங்கள் திட்டம் செயல்படுத்தப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வேளாண்மை-உழவர் நலத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது: மாதிரி கிராமத் திட்டத்தில் விழிப்புணர்வு கூட்டங்கள், நுழைவுநிலை நடவடிக்கைகள், சமுதாய நீர் நடப்பு, வளங்களுக்கான நிலப்படம் வரைதல், ஒற்றைச்சாளரச் செய்தி மற்றும் தகவல் மையம் அமைத்தல் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 2021-22ம் ஆண்டில் ₹17.174 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். தமிழகத்தில் பாரம்பரிய நெல் வகைகளை திரட்டி பாதுகாக்கும் விதமாக, அரசு விதைப்பண்ணைகளில் 200 ஏக்கரில் ₹25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.