ஆபாச பதிவு வெளியிடுவதாக கூறி யூடியூப் சேனலை முடக்கினால் தீக்குளிப்பேன்: ரவுடி பேபி சூர்யா வீடியோ வைரல்

மணப்பாறை: ஆபாச பதிவு வெளியிடுவதாக கூறி யூடியூப் சேனலை முடக்கினால் தீக்குளிப்பேன் என ரவுடி பேபி சூர்யா எச்சரிக்கை விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காததால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணைய தளத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது‌. இதை பயன்படுத்தி பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாணவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிலர் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பல வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஆபாச இணையதளங்களை முடக்க காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை ேசர்ந்த ரவுடி பேபி என அழைக்கப்படும் டிக்டாக் புகழ் சூர்யா (32) என்பவரது யூடியூப் சேனலையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரவுடி பேபி சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ஆபாச வீடியோக்களை வெளியிடும் யூடியூப் ேசனலை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் எனது சேனலை முடக்குறீங்களா... முடக்குங்க.... நான் தவறான பாதைக்கு போவேன்.. சத்தியமா போவேன். என் பிள்ளை மேல ஆணையா போவேன்...போவேன்... நூறு பேருடன் ‘‘அதுக்கு’’ தயார்... என் மேல விபச்சார கேஸ் போட்டா தீக்குளிப்பேன்.. என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: