சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும்: பாமக உறுப்பினர் சதாசிவம் பேரவையில் கோரிக்கை

சென்னை: சேலம் மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என பாமக உறுப்பினர் சதாசிவம் பேரவையில் கோரிக்கை விடுத்துள்ளார். 11 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பெரிய மாவட்டமாக சேலம் உள்ளது என சதாசிவம் எம்.எல்.ஏ. கூறியுள்ளார். மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, அந்தியூர் ஆகிய தொகுதிகளை சேர்த்து தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். நடப்பு கூட்டத் தொடரிலேயே அறிவிக்க வேண்டும் என்று பாமக உறுப்பினர் கோரிக்கை வைத்துள்ளார்.

Related Stories: