சென்னை : சென்னை அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, வரும் ஓராண்டு காலத்திற்கு அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய செய்திச் சித்திரம் ஒன்றை ஒலிபரப்புகிறது. விடுதலைப் போராட்ட நாயகர்கள் என்ற தலைப்பில், தலா 10 நிமிடங்களுக்கு ஒலிபரப்பாகும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை மணி 6.45 செய்திக்கதம்பம் நிகழ்ச்சியில் சென்னை அலைவரிசை ஒன்றில் இது ஒலிபரப்பாகிறது. இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்யும்.