சென்னை: குற்றவழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமான வரி அபராதத்தை கைவிட முடியாது என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு எதிரான வழக்கில் வருமான வரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளது. அபராதம் விதித்தது ஏன் என்பது குறித்து சென்னை உயர்நீதமன்றத்தில் வருமான வரித்துறை விளக்கம் அளித்தது. 1994-95க்கான வருமான வரியாக ரூ.48 லட்சத்தை செலத்த 2002-ல் சசிகலாவுக்கு உத்தரவிடப்பட்டது என கூறியுள்ளது. வரி செலுத்தும் கோரிய வருமான வரித்துறை உத்தரடவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.