பாஜ தலைவர்களால் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் பாலியல் புகார்களை திரும்ப பெற வற்புறுத்தப்பட்டனர்: மகிளா காங்கிரஸ் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கே.டி.ராகவன் கடவுளின் பூஜை அறையில் நின்றுகொண்டு, ஒரு பெண்ணிடம் தகாத வகையில் ஆபாசமாக பாலியல் வன்மத்துடன் நடந்துகொண்டுள்ளார். பாஜ கட்சி பெண்களுக்கு எதிராக கடும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் தங்கள் தலைவர்களுக்கு பாதுகாப்பு அரனாக இருந்துவருவது, பாலியல் குற்றவாளிகளை ஊக்குவிக்கின்ற குற்றமாகும். ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக அரசு, பாஜவை சேர்ந்த பாலியல் குற்றவாளிகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பல தவறுகளை மூடி மறைத்துவிட்டது. கடந்த காலங்களில், பாஜ தலைவர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்கள், தங்களது பாலியல் புகார்களை திரும்ப பெறுமாறு வற்புறுத்தப்பட்டார்கள். பாஜ கட்சியின் பொது செயலாளர் கே.டி.ராகவன் போன்ற பாலியல் குற்றவாளிகளை இந்த அரசு உடனடியாக விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும். நீதியின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

Related Stories: