திருப்போரூர்: சென்னை அருகே புறநகர் பகுதியான நாவலூர், தாழம்பூர், காரணை, சிறுசேரி பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், வெளி மாநில ஆட்கள் மூலம் தயாரித்து கடைகளுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் செங்கல்பட்டு மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்கல்பட்டு எஸ்.பி. விஜயகுமார், மாமல்லபுரம் டி.எஸ்.பி. குணசேகரன் ஆகியோர் உத்தரவின் பேரில் தாழம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று காரணை, தாழம்பூர் பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.