சென்னை: மின்வாரியத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். சென்னை, அண்ணாசாலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் அமைச்சர் செந்தில்பாலாஜி, மானியகோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் அணைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:மின்வாரிய தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 17 தொழிற்சங்க சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றன. மின்வாரியத்தில் 1 லட்சத்து, 45 ஆயிரம் பணியிடங்களில் ஏறத்தாழ 55 ஆயிரம் பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.