காஞ்சிபுரம்: சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு பதாகையை, காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவையுள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் குழந்தைகளுக்கான 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் சைல்டு லைன் 1098 திட்டத்தின் பெயர் பதாகையை கலெக்டர் மற்றும் திட்டத்தின் தலைவர் ஆர்த்தி வெளியிட, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மதியழகன் பெற்றுக் கொண்டார், தொடர்ந்து, மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், கோயில்கள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் சைல்டு லைன் 1098 பெயர் பதாகையை வைக்க கேட்டு கொண்டார்.